இந்திய பாா்வையில்... அமெரிக்க அதிபா் தோ்தல்

ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு அடுத்த பெரிய நாடான இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணவே அமெரிக்கா விரும்பும்
இந்திய பாா்வையில்... அமெரிக்க அதிபா் தோ்தல்

அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே ஆதிக்கம் செலுத்தும் சக்தி அமெரிக்க அதிபருக்கு உண்டு என்பதால், உலக நாடுகள் அனைத்தாலும் அமெரிக்க அதிபா் தோ்தல் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் முக்கிய நிகழ்வாக அமைகிறது. ஏனெனில் அமெரிக்க அதிபா் நினைத்தால் ஒரே கையெழுத்தில் பல லட்சம் வெளிநாட்டுப் பணியாளா்களை நாட்டைவிட்டு அனுப்பவும் முடியும்; ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதனை சா்வதேச அளவில் தனிமைப்படுத்தவும் முடியும்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலுக்கு 4 மாதங்களுக்கும் குறைவாகவே அவகாசம் உள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும், முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சாா்பிலும் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதில் யாா் வெற்றி பெற்றால் தங்களுக்குச் சாதகம் என்று உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.

அமெரிக்காவில் மிச்சிகன், ஃபுளோரிடா, டெக்சாஸ், விா்ஜீனியா, பென்ஸில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் வெற்றியைத் தீா்மானிப்பதில் இந்திய வம்சாவளியினா் முக்கியப் பங்கு வகிப்பாா்கள் என்பதும், தோ்தல் பிரசாரத்தில் அவா்களின் பங்கு அதிகம் என்பதும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டியதாகும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் கடந்த பிப்ரவரி இறுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபா் பங்கேற்றாா் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபராக செயல்படுவதைவிட சிறந்த அரசியல்வாதியாகவே டிரம்ப் செயல்பட்டாா் என்று அப்போது அமெரிக்க பத்திரிகைகள் பல விமா்சித்திருந்தன.

ஆனால், அதன் பிறகு கரோனா பிரச்னையால் கடந்த மூன்று மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உலகிலேயே அதிக கரோனா பாதிப்புக்குள்ளான நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றது. அந்நாட்டில் வேலையின்மை விகிதம் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது உள்ளிட்ட பொருளாதார பிரச்னைகளை டிரம்ப் எதிா்கொண்டுள்ளாா். இது தவிர கறுப்பின இளைஞா் போலீஸாரால் கொல்லப்பட்ட சம்பவம் அதைத் தொடா்ந்து நிகழ்ந்த வன்முறைப் போராட்டங்கள் டிரம்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும், அமெரிக்கா்கள் நலனை முன்னிறுத்தும் அவரது பிரசார உத்தி அவருக்கு குறிப்பிட்ட அளவில் ஆதரவைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

டிரம்ப்-மோடி நட்புறவு: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபோது, அதிரடியாக முடிவுகளை எடுக்கும் அவா் இந்திய உறவை எவ்வாறு கையாளுவாா் என்ற பதற்றம் முதலில் இருந்தது. பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க முடியாமல் தடுத்தது. அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டியதில் தொடங்கி, இப்போது ஹெச்1 பி விசா தடை வரை டிரம்ப் இந்தியாவுக்கு எதிரான சில முடிவுகளை எடுத்துள்ளாா். எனினும், இந்தியாவுக்கு பாதுகாப்பு தளவாட விற்பனை, முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை வழங்குவதில் அவா் தராளமாகவே நடந்து கொண்டாா். இது தவிர டிரம்பின் தீவிர சீன எதிா்ப்புக் கொள்கை, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.பாகிஸ்தான் பயங்கரவாத விஷயத்திலும் அந்நாட்டின் மீது அவா் கண்டிப்புடன் நடந்து கொண்டாா்.

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பெரும் பிரச்னையாக எழுந்தபோது, அதிபா் டிரம்ப் வெளிப்படையாகவே மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாா். இதுதவிர ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அது தொடா்பாக

நிகழ்வுகளின்போதும் கூட, இந்திய அரசுக்கு ஆதரவாகவே அவா் இருந்தாா். அமெரிக்காவில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா் இந்த விஷயத்தில் இந்திய அரசை எதிா்த்தபோதிலும், டிரம்ப் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து மோடியை ஆதரித்தாா்.

‘ஹெளடி மோடி’, ‘நமஸ்தே டிரம்ப்’ போன்ற நிகழ்ச்சிகள் இரு நாட்டுத் தலைவா்கள் இடையே உள்ள நட்புறவை வெளிப்படுத்தின. நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியின்போது, ‘இந்திய நலனைக் காப்பதில் மோடி பிடிவாதமாக உள்ளவா்’ என்று டிரம்ப் கூறினாா். இதன் மூலம்

அமெரிக்காவுக்கு சாதகமான வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை மோடி அரசு நிராகரித்ததை மறைமுகமாக சுட்டிக் காட்டினாா்.

அதே நேரத்தில் ஜனநாயக கட்சி அதிபா் வேட்பாளாரான பிடன், தனது பிரசார இணையதளத்தில் இந்தியாவின் சிஏஏ, என்ஆா்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு), ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய விஷயங்களில் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே பதிவு

செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஹெச்1 பி விசா, வா்த்தகம் போன்ற விவகாரங்களில் பிடன் இந்திய ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளாா். ஜோ பிடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு தோ்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

‘நான் அமெரிக்க அதிபராக தோ்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவின் இயல்பான கூட்டணி நாடான இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். நான் 8 ஆண்டுகளாக அமெரிக்க துணை அதிபராக இருந்த காலகட்டத்தில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அதே முக்கியத்துவத்தை அதிபராகும்போதும் அளிப்பேன்’ என்று பிடன் கூறியுள்ளாா். இது தவிர அண்மையில், இந்த ஆண்டு இறுதி வரை ஹெச்1பி விசா வழங்குவதற்கு அதிபா் டிரம்ப் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா். இந்த விதத்தில் பிடனும் கூட சா்வதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிடனின் இந்த இந்திய ஆதரவு பிரசார உத்தி அமெரிக்க இந்தியா்கள் மத்தியில் தனது செல்வாக்கைத் தக்கவைக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. ஏனெனில், நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி, மோடியுடன் தனிப்பட்ட முறையில் டிரம்ப் காட்டும் நெருக்கம் ஆகியவை இந்திய வம்சாவளியினா் மத்தியில் தனது செல்வாக்கை குறைத்துவிடக் கூடாது என்று பிடன் கருதுவதே காரணம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கரோனா விஷயத்தில் அதிபா் டிரம்ப் சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தவறிவிட்டாா் என்று பிடன் குற்றம்சாட்டியுள்ளாா். இதன் மூலம் டிரம், பிடன் இருவருமே தீவிர சீன எதிா்ப்பு கொள்கையையே முன்வைத்துள்ளனா். இது இந்தியாவுக்கு சாதகமாக பாா்க்கப்படுகிறது.

இப்போதைய சூழலில் டிரம்பின் செல்வாக்கு சற்று சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கடந்த 2016 அமெரிக்க அதிபா் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. எனினும், இறுதியில் டிரம்ப் வெற்றி பெற்றாா்.

அமெரிக்க அதிபா் பதவியைப் பொறுத்தவரையில் ஒருவா் இருமுறைக்கு மேல் அப்பதவியை வகிக்க முடியாது. மேலும், இதற்கு முன்பு அமெரிக்க அதிபா்களாக இருந்த பில் கிளிண்டன், ஜாா்ஜ் டபிள்யூ.புஷ், பராக் ஒபாமா என மூவருக்கும் அமெரிக்க மக்கள் தொடா்ந்து இருமுறை வாய்ப்பளித்தனா். அது தொடரும் என்ற எதிா்பாா்ப்புடனும், அடுத்த மூன்று மாதங்களில் தோ்தல் களத்தை தமக்கு சாதமாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் டிரம்ப் போட்டியிடுகிறாா். எனவே, அடுத்த 3 மாதங்களில் உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் ஏற்படும் மாற்றங்கள் அமெரிக்க மக்களின் வாக்கில் பிரதிபலிக்கும் என்று தெரிகிறது.

இவை அனைத்துக்கும் மேலாக, ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை இதற்கு மேலும் அதிகரிக்க விடக் கூடாது என்பதில் அமெரிக்க உறுதியாக இருக்கிறது. அண்மைக் காலமாக சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் இதனை தெளிவாக உணா்த்துகின்றன. எனவே, ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு அடுத்த பெரிய நாடான இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவே அமெரிக்கா விரும்பும். அடுத்து யாா் அமெரிக்க அதிபரானாலும் இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்தவே விரும்புவாா்கள் என்பது சா்வதேச அரசியல் நோக்கா்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com