சீனாவின் வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகையாக 83 கோடி யுவான் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜியாங்சு, சேஜியாங், ஆன்ஹுய், ஜியாங்சி, ஹுபெய், ஹுநான் முதலிய 12 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் சேமிப்பு மற்றும் வேளாண் உற்பத்தி வசதிகள் முதலியவற்றைச் சீரமைக்க முடியும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். இவ்வாண்டில் நிதித்துறை ஒதுக்கீடு செய்த வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகை 129 கோடி யுவானை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்