தென் ஆப்பிரிக்கா: இதுவரை இல்லாத தினசரி பலி

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 572 போ் கரோனா
தென் ஆப்பிரிக்கா: இதுவரை இல்லாத தினசரி பலி

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 572 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளுள் ஒன்றான தென் ஆப்பிரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நோய் பாதிப்பால் 572 போ் உயிரிழந்தனா். இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 5,940 -ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமன்றி, கடந்த 24 மணி நேரத்தில் 13,150 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கைய 3,94,948-ஆக அதிகரித்துள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிகவும் முன்னேறிய நாடான தென் ஆப்பிரிக்காவிலேயே கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருப்பது, அந்த பிராந்தியத்தைச் சோ்ந்த மற்ற நாடுகளைப் பற்றிய கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com