சீன இளம் முன்னோடிகள் குழுவின் 8 ஆவது தேசிய மாநாடு 23 ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துக்கடிதத்தில், இளம் முன்னோடிகள் குழு, சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தை உருவாக்குவதற்குரிய ஆயத்தக் குழுவாகும் எனப் புகழாரம் சூட்டினார்.
மேலும், புதிய யுகத்தில், சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசத்தை நிலைநிறுத்தி வளர்க்கவும், சீன தேசத்தின் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவை நனவாக்கவும் இளம் முன்னோடிகள் குழு எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்