சிங்கப்பூா்: மேலும் 277 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் 277 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூா்: மேலும் 277 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் 277 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 277 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் 5 பேருக்கு மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த் தொற்றியுள்ளது. எஞ்சிய அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,375-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com