உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாகி வருகிறது.பல்வேறு நாடுகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தவித்து வருகின்றன.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1063 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,287 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 244883 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தான் முழுவதும் இதுவரை 1931102 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21256 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.