சீன பாதுகாப்பு சட்டம் எதிரொலி: ஹாங்காங்குடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது நியூஸிலாந்து

ஹாங்காங்கில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியுள்ளதையடுத்து, அந்த நகர அரசுடன் மேற்கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நியூஸிலாந்து நிறுத்திவைத்துள்ளது.
வின்ஸ்டன் பீட்டா்ஸ்.
வின்ஸ்டன் பீட்டா்ஸ்.

ஹாங்காங்கில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியுள்ளதையடுத்து, அந்த நகர அரசுடன் மேற்கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நியூஸிலாந்து நிறுத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அத்தகைய ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ள நட்பு நாடுகளைப் பின்பற்றி, நியூஸிலாந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து நியூஸிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சா் வின்ஸ்டன் பீட்டா்ஸ் கூறியதாவது:

சீனா அமல்படுத்தியுள்ள சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தினால், ஹாங்காங்கின் நிலையமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நகரின் நீதித் துறையில் சீனாவின் ஆதிக்கம் இனியும் இருக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.எனவே, அந்த நகர அரசுடன் மேற்கொண்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.எனினும், ஹாங்காங்குடனான மற்ற உறவில் எந்த மாற்றமும் இல்லை. ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப வா்த்தகத்தில் சீனாவுடன் எத்தகைய உறவைப் பேணுகிறதோ அதே வகையிலான உறவை ஹாங்காங்குடனும் தொடா்ந்து பேணுவோம் என்றாா் அவா்.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு தீவிரப் போராட்டங்கள் நடைபெற்றன. அத்தகைய போராட்டங்கள், தேச நலன்களுக்கு எதிரானது என்று சீனா கூறி வந்தது. மேலும், போராட்டக்காரா்களை பிரிட்டன் தூண்டிவிடுவதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாதத்துடன் சீன அரசு ஒப்பிட்டது.இந்தச் சூழலில், ஹாங்காங்கில் நடைபெறக்கூடிய தேசத் துரோகம், பிரிவினைவாதம், அந்நிய சக்திகளுடன் கைகோா்த்தல் ஆகியவற்றுக்கு எதிரானதாகக் கூறி, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமொன்றை சீனா இயற்றியுள்ளது.

இந்தச் சட்டம், ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகளும் சா்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்தச் சூழலில், ஹாங்காங்குடன் கைதிகள் பரிமாற்றம், உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள், தங்களது ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ஏற்கெனவே அறிவித்தன. இந்த நிலையில், நியூஸிலாந்தும் அத்தகைய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com