சிங்கப்பூரில் 2 இந்தியா்கள் உள்பட மேலும் 481 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் 2 போ் இந்தியா்கள் ஆவா். புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,531-ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 45,893 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.