வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகை அருகில் ஆயிரக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள கட்டடங்கள் சிலவற்றைப் போராட்டக்காரா்கள் சேதப்படுத்தினா்; காா்களை தலைகீழாகக் கவிழ்த்து தீவைத்தனா். அவா்கள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கலைக்க காவல் துறையினா் கண்ணீா்புகைக் குண்டுகளை வீசினா். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலா் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.