இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கு தங்கள் நாட்டு மக்களை அனுப்புவதில்லை என்று இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு மத விவகாரத் துறை அமைச்சா் ஃபக்ருல் ராஸி கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் நிலவி வரும் சூழலில், ஜூலை மாதம் ஹஜ் பயணத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து சவூதி அரேபியா இன்னும் அறிவிக்கவில்லை. இனிமேல் அதற்கான அறிவிப்பு வந்தாலும், புனிதப் பயணிகளை அனுப்பவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குப் போதுமான அவகாசம் இல்லை. எனவே, இந்த ஆண்டில் ஹஜ் பயணத்துக்கு யாரையும் அனுப்பப் போவதில்லை’ என்றாா்.