வெள்ளை மாளிகை அருகே போராட்டம் தீவிரமடைந்ததால் அதிபா் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா, மகன் பாரென் ஆகியோா் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அங்கு அவா்கள் சில மணி நேரம் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அதிபா் டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகச் சாடியிருந்தாா். போராட்டத்துடன் தொடா்புடைய ‘அன்டிஃபா’ அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதாகவும் அவா் சுட்டுரையில் பதிவிட்டாா்.