சீனாவின் திபெத்தில் விமானம் மூலம் மரங்களின் விதை தூவுதல்

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜுன் 9ஆம் நாள் விமானம் மூலம் மரங்களின் விதைகளைத் தூவுதல் சோதனை முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டது.
சீனாவின் திபெத்தில் விமானம் மூலம் மரங்களின் விதை தூவுதல்

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜுன் 9ஆம் நாள் விமானம் மூலம் மரங்களின் விதைகளைத் தூவுதல் சோதனை முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டது. பனி மூடிய பீடபூமியில் பசுமைமயமாக்கத்தை இது பெரிதும் முன்னேற்றும் என்று கருதப்படுகிறது. 

உயர் வேகம், உழைப்பு ஆற்றல் சிக்கனம், குறைவான உற்பத்தி செலவு உள்ளிட்ட தனிச்சிறப்புகளை, விமானம் மூலம் விதை தூவுதல் கொண்டுள்ளது. அத்துடன், இந்த வழிமுறை நில அமைவுக் கட்டுப்பாடின்றி மேற்கொள்ளப்பட முடியும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வனத்தொழில் மற்றும் புல்வெளி பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், விமானம் மூலம் விதை தூவுதல், திபெத்தில் பசுமைமயமாக்கத்தை முன்னேற்றும் முக்கிய நடவடிக்கையாகும் என்றார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com