அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 2 லட்சமாக உயரலாம் என்று ஹாா்வா்டு பல்கலைக்கழகப் பேராசிரியா் ஆஷிஷ் ஜா எச்சரித்துள்ளாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா், அந்தச் சூழலில் மேலும் துயரம் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்கு அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.