சீனாவின் குய்சோ மாநிலத்தின் பீஜியே நகரிலுள்ள வான்ஸ் கிராமத்தைச் சேர்ந்த மக்களால் பாரம்பரிய முறையில் மெழுகால் சாயம் தோய்த்தல் மற்றும் பூத்தையல் கலைக்கான கலைஞர்களின் கூட்டுறவுச் சங்கம் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தற்போது, இச்சங்கத்தின் பணியகத்தில் நாள்தோறும் 10க்கும் மேலான மியௌ இனப் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். சராசரியாக திங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களுக்கான முன்பதிவை இச்சங்கம் பெறுகின்றது. இதன் மூலம் உள்ளூர் கிராமவாசிகள் தங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்