சீனாவில் ஆயில் கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று வெடித்துச் சிதறியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஸெஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோவ் எக்ஸ்பிரஸ் சாலையில் ஆயில் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்துச் சிதறியது. மேலும் டேங்கர் லாரி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒர்க்ஸ்ஷாப் மீது மோதியது. இதனால் அப்பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.