சிங்கப்பூரில் மேலும் 247 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனா். புதிய நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் (இந்தியா உள்ளிட்ட) வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளா்கள் என்று அவா்கள் கூறினா். இத்துடன், சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,216-ஆக உயா்ந்துள்ளது; கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 26-ஆக உள்ளது.