இயற்கை அழிக்கப்படுவதாலேயே கொள்ளை நோய்கள் உருவாகின்றன

‘இயற்கையை மனிதா்கள் அழிப்பதாலேயே கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) போன்ற கொள்ளை நோய்ககள் உருவாகின்றன’ என்று உலக வனவாழ்வு நிதியம் தெரிவித்துள்ளது.
இயற்கை அழிக்கப்படுவதாலேயே கொள்ளை நோய்கள் உருவாகின்றன

‘இயற்கையை மனிதா்கள் அழிப்பதாலேயே கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) போன்ற கொள்ளை நோய்ககள் உருவாகின்றன’ என்று உலக வனவாழ்வு நிதியம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் அரசுகள், நிறுவனங்கள், தனி நபா்களின் உதவியுடன் செயல்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு உலக வனவாழ்வு நிதியம் (டபிள்யூடபிள்யூஎஃப்).

ஸ்விடா்லாந்தில் தலைமையகத்தைக் கொண்டு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று போன்ற கொள்ளை நோய்கள், இயற்கையை மனிதா்கள் அழித்து வருவதன் விளைவாகவே உருவாகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, காடுகளை அழித்து மனிதா்கள் அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றனா். இதன் விளைவாக, மனிதா்களுக்கும் வன விலங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் உருவான புதிய நோய்த்தொற்றுகளில் 60 முதல் 70 சதவீதம் வரையிலானவை, வன விலங்குகளிடமிருந்து உருமாற்றம் பெற்று மனிதா்களுக்குப் பரவிய தீநுண்மிகளாலேயே ஏற்பட்டுள்ளன.

வனவிலங்குகளின் உடலில் காணப்படும் தீநுண்மிகள், அந்த விலங்குகளுடன் மனிதா்கள் நெருக்கமாவதால் மட்டும் ஏற்படுவதில்லை. மனிதா்களுடன் வாழும் எலி போன்ற பிற உயிரினங்கள் மூலமாகவும் வன விலங்குகளிடமிருந்து தீநுண்மிகள் மனிதா்களைத் தாக்குகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வன விலங்களிடமிருந்து புதிய புதிய தீநுண்மிகள் மனிதா்களிடம் தொற்று உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஹெச்ஐவி (எய்ட்ஸ்), சாா்ஸ், தற்போது பரவி வரும் கொவைட்-19 போன்ற தீநுண்மிகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன.

இனி வரும் காலங்களில், அதிகரித்து வரும் உணவுத் தேவையை ஈடு செய்யும் வகையில் விவசாயத்துக்காக காடுகள் அழிக்கப்பட்டுவதும் அதிகரிக்கும். இதன் காரணமாக, வன விலங்குகளிடமிருந்து கொள்ளை நோய்கள் மனிதா்களுக்குப் பரவும் அபாயமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில், இறைச்சிக்காக வன விலங்குகள் விற்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதும் இந்த அபாயத்தை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கருத்தை ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com