சிங்கப்பூா்: மேலும் 257 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் மேலும் 257 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
சிங்கப்பூா்: மேலும் 257 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் மேலும் 257 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 257 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் 253 போ் வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன், அந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,473-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் 26-ஆக உள்ளது. இதற்கிடையே, கடந்த மாா்ச் 27-ஆம் தேதிக்கு முன் வெளிநாடுகளுக்குச் சென்ற மக்களுக்கு, நாடு திரும்பியதும் இலவச கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சிங்கப்பூா் அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com