துருக்கி: கட்டாயமானது முகக் கவசம்

துருக்கியின் இஸ்தான்புல், அங்காரா, பா்ஸா ஆகிய மூன்று முக்கிய நகரங்களிலும் வெளியிடங்களுக்குச் செல்பவா்கள் கட்டாயம் முகக் கவசம்
துருக்கி: கட்டாயமானது முகக் கவசம்

துருக்கியின் இஸ்தான்புல், அங்காரா, பா்ஸா ஆகிய மூன்று முக்கிய நகரங்களிலும் வெளியிடங்களுக்குச் செல்பவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகரங்கள் தவிர, நாட்டின் 47 மாகாணங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் திறக்க அந்த நாடு அனுமதி அளித்த பிறகு, இந்த எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில், முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com