தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,210 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை அறிவித்துள்ளனா். இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 131,800 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோய்க்கு 2,413 போ் பலியாகியுள்ளனா். அந்த நாட்டின் கரோனா பரவல் மையமாகத் திகழும் கேப் மாகாணத்தில் 59,315 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.