இலங்கை தலைநகா் கொழும்பிலுள்ள சா்வதேச விமான நிலையத்தை அடுத்த மாதம் 1-ஆம் தேதி மீண்டும் திறக்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு கைவிட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளா்களை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாா்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ள அந்த விமான நிலையத்தைத் திறக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.