சிங்கப்பூரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 213 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவா்களில் 202 போ், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்து, பணியாளா் குடியிருப்புகளில் கூட்டமாக வசித்து வரும் தொழிலாளா்கள் எனவும் 5 போ் மட்டுமே சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்கள் எனவும் அவா்கள் கூறினா். இத்துடன், அந்த நாட்டில் 43,459 பேருக்கு கரோனா பாதப்பு ஏற்பட்டுள்ளது.