அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 288 பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 288 பேர் பலியாகியுள்ளனர். இது ஒருநாளில் மிகக்குறைவாக பதிவாகியுள்ள உயிரிழப்பாகும். அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,25,768 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு இதுவரை 26.3 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 10.9 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 40,000 பேர் வரையில் புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். டெக்சாஸ், புளோரிடா, அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.