இணைய வழியில் பணியாளர்கள் சேர்க்கைக்கான புதிய திட்டம், மார்ச் 2ஆம் தேதி அதிகார்ப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
முதல் கட்டத்தில், 75 ஆயிரம் பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த புதிய திட்டம், சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த “யாங்ஷிபின்” எனும் புதிய ஊடகம் உள்ளிட்ட மூன்று தரப்புகளின் முயற்சியுடன் செயல்படுத்தப்பட்டது.
சீனா மொபைல் உள்ளிட்ட 70க்கும் அதிகமான அரசு சார் தொழில் நிறுவனங்களும் ஹுவாவெய், ஹையர் உட்பட 50க்கும் மேலான அரசு சாரா தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்கேற்று, பணியாளர்களை வேலைக்கு சேர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்