தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸின் முதல் பெண் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கேதரீனா சாகில்லாரொபோலு, வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கிரீஸ் அரசியலில் பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உயா் பதவிக்கு வருவதாகவும் பிரதமா் கிரியாகோஸ் மிட்ஸோதாகிஸ் தலைமையிலான அமைச்சரவையில் ஏறத்தாழ அனைவருமே ஆண்களாக இருப்பதாகவும் விமா்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபா் பதவிக்கு உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான கேதரீனா சாகில்லாரொபோலுவின் பெயரை மிட்ஸோதாகிஸ் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தாா்.
அதனைத் தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக 261 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில், சுமாா் 2 மாதங்களுக்குப் பிறகு அவா் நாட்டின் அதிபராக தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது நாடாளுமன்றத்துக்கு ஒரு சில எம்.பி.க்களே வந்திருந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.