ரியாத்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானச் சேவையை முற்றிலும் நிறுத்தியது சவூதி அரேபியா.
இந்த இரண்டு வார காலம் என்பது அதிகாரப்பூர்வ விடுமுறையாகக் கருதப்படும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சொந்த நாடு திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
விதிவிலக்காக சில விமான சேவையை மட்டும் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று சவூதி அரேபியாவின் உள்விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.