கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்ட வூஹான் நகருக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கச் சென்ற 15 தேசிய நிலையிலான குழுக்கள் மார்ச் 17-ஆம் தேதி முதல் வூஹானிலிருந்து சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.
ஜியாங்சூ(Jiang Su, லியெள நீங்(Liao Ning)உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 15 குழுக்கள் வூஹான் நகருக்கு சென்று தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவ குழுக்கள் தற்போது சொந்த ஊர் திரும்புகின்றனர்.
நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் தீவிர மருத்துவச் சேவை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களும் விரைவில் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்