உலகளவில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 11,384 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கரோனாவால் அந்நாட்டில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். 3,255 பேர் பலியாகினர். தற்போது இந்த வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
உலக அளவில் கரோனாவால் இதுவரை 2,75,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 91,912 பேர் குணமடைந்துவிட்டனர். வைரஸ் உருவான சீனாவைவிட இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
அந்த நாட்டில் கரோனாவால் 47,021 பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4,032 பலியாகியுள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஈரானும், ஸ்பெயினும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.