மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
காவ் பகுதிக்கு வடக்கே டாா்கின்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் சுமாா் 30 வீரா்கள் உயிரிழந்தனா்; 5 வீரா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாலியில் கடந்த 4 மாதங்களில் ராணுவத்தினா் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.