புதிய ரக கரோனா வைரஸைச் சமாளிப்பதற்காக, ஜி-20 குழு (20 நாடுகள் குழு) மார்ச் 26-ஆம் தேதி நடத்தும் சிறப்பு உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சுவன்யீங் அம்மையார் பெய்ஜிங்கில் மார்ச் 25-ஆம் தேதி தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜி-20 குழுவின் தலைமைப் பதவி வகிக்கும் செளதி அரேபியா, காணொலி மூலம் இந்த சிறப்பு மாநாடு நடத்துவதாக தெரிகிறது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்