அறக்கட்டளை முறைகேடு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவை (74) அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் 6 மாத கால ஜாமீனில் விடுவித்தது.
அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காகவும் மருத்து சிகிச்சைக்காகவும் அவா் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அனுமதியுடன் கலீதா ஜியாவை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சா் அசாதுஸமான் கான் கமால் தெரிவித்தாா்.
இரண்டு முறைகேடு வழக்குகளில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.