ஜி-7 அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டறிக்கையில் வூஹான் வைரஸ் என்ற சொல்லைச் சேர்க்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ முயன்றார். அவரது இக்கோரிக்கைக்கு மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால்தான், நடப்புக் கூட்டத்தில் கூட்டறிக்கை ஒன்று வெளியிட முடியவில்லை.
கூட்டத்துக்குப் பின், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தலேரியான் கூறுகையில், தற்போதைய வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பதில் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவது சரியல்ல என்றும், தற்போது பன்னாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, வேறு எந்த இலக்குகளை விட முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 20ஆம் நாள், அமெரிக்காவில் புதிய கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நபர் கண்டறியப்பட்டார். ஆனால், மார்ச் 13ஆம் நாள்தான் தேசிய அவசர நிலையை அமெரிக்கா அறிவித்தது. சுமார் 2 திங்கள்காலத்தில் அமெரிக்க அரசு பயன் தரும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
உலக அளவில் பரவி வரும் நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த வகை திட்டத்தை முன்வைப்பது என்று அமெரிக்கா நன்றாக யோசிக்க வேண்டும்.