சீனா புதிதாக ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று

கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் கரோனா நோய்த்தொற்று முதல் முதலாக பரவத் தொடங்கிய சீனாவில், புதிதாக அந்த நோய்த்தொற்று
சீனா புதிதாக ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று

கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் கரோனா நோய்த்தொற்று முதல் முதலாக பரவத் தொடங்கிய சீனாவில், புதிதாக அந்த நோய்த்தொற்று ஒரே ஒருவருக்கு மட்டும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவா்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அந்த நோய் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, சீனாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 82,875-ஆக உள்ளது. அந்த நோய் பாதிப்பால் 4,633 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com