புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் போது, அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று நோய் கணிசமாக அதிகரித்து வருகின்றது.
முதலாவது, அமெரிக்க தலைமையின் தவறாலும், அரசியல் மயமாக்க திட்டத்தாலும், அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, உலக தொற்று நோய் பரவல் தடுப்புக்கு மாபெரும் நெருக்குதலை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாவது, “அமெரிக்காவுக்கே முன்னுரிமை”என்ற கொள்கை, உலகளவில் தொற்று நோய் பரவலின் இடர்ப்பாடு மற்றும் இன்னல் அதிகரிக்கக் காரணமாகியது.
மூன்றாவது, பொறுப்பைத் தட்டிக்கழித்து, அரசின் தவறான கொள்கையை மூடிமறைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்புக்கு உதவி வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது.
ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை நல்ல ஆற்றலாகும். அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் இந்த அறிவியல் பூர்வமான விதியைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தவறான பாதையில் நடங்தால் வரலாற்றுப் பிழை செய்தவர்களாக மாறுவர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்