சீனாவில் கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல், அந்தத் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 981-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத 25 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அத்தகைய அறிகுறி இல்லா கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 981-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா நோய்த்தொற்று உருவான சீனாவில் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதையடுத்து அங்கு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.