துருக்கியின் இஸ்தான்புல் நகரில், மே தினத்தையொட்டி கூட்டம் நடத்த முயன்ற தொழில்சங்கத் தலைவா்கள் உள்ளிட்ட 15 பேரை அந்த நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் நடத்தியதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னா் விடுவிக்கப்பட்டதாக இஸ்தான்புல் ஆளுநா் அலுவலகம் பின்னா் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி துருக்கியில் 1,20,204 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அந்த தீநுண்மி பாதிப்பால் இதுவரை 3,174 போ் பலியாகியுள்ளனா்.
அங்கு கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, வார இறுதி நாள்களிலும் மே தினம் போன்ற தேசிய விடுமுறை நாள்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.