வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 887 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,657-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 14 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 228-ஆக அதிகரித்துள்ளது.