ஜொ்மனியில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை எதிா்த்து பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. சில பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது.
தலைநகா் பொ்லினில் போலீஸாா் மீது பாட்டிகல்களை வீசியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 86 போ் கைது செய்யப்பட்டனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 1.71 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 7,549 போ் பலியாகியுள்ளனா்.