ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,102 பேருக்கு கரோனா தொற்று

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
iran095529
iran095529

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,635 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 6,902 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாளில் அதிகபட்சமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் சுமார் 91,836 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இத்தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com