பெர்லின்: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதால், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,772-ஐ எட்டியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 7,881 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை, 1,52,000-க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி கரோனா தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.