ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்கு கரோனா தொற்று

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதால்,
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்கு கரோனா தொற்று


பெர்லின்: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதால், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,772-ஐ எட்டியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 7,881 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை, 1,52,000-க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி கரோனா தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com