மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முடிவு கட்டப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கரோனா ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஸ்லோவேனியாவில் கரோனா நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இனி, நாட்டில் இதுதொடா்பான சிறப்பு கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.