சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ட்சாவ் ஜுயெ (Zhaojue) மாவட்டத்திலுள்ள செங்குத்தான பாறையில் கிராமம் ஒன்று அமைந்துள்ளது.
நிலவியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இக்கிராமத்துக்குச் செல்வதற்குரிய நெடுஞ்சாலை உருவாக்கப்படவில்லை.
இங்குள்ள கிராமவாசிகள் செங்குத்தான பாறையில் ஏறினால் மட்டுமே பிற இடங்களுக்குப் போக முடியும். இப்பிரச்சினையைத் தீர்க்கும் விதமாக, அரசின் உதவியோடு, 31 வறுமை குடும்பங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் மே 13-ஆம் நாள் செங்குத்தான பாறையிலிருந்து புதிய வீடுகளுக்கு குடிபெயர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல்: சீன ஊடகக் குழமம்