சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக அமெரிக்க விமானிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ‘ஃபெட்எக்ஸ்’ நிறுவனத்தின் சரக்கு விமானத்தை ஓட்டி வந்த பிரையன் துகான் என்ற அந்த விமானி, கட்டுப்பாடுகளை மீறி தனது ஹோட்டல் அறையிலிருந்து 3 மணி நேரத்துக்கு வெளியே சென்ற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் மற்றும் வெப்பநிலைமானியை வாங்குவதற்காக தனது அறையிலிருந்து வெளியேறியதாக நீதிமன்றத்தில் பிரையான் தெரிவித்தாா்.