பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 1,841 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நோய்க்கு மேலும் 36 பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,966-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 939-ஆகவும் அதிகரித்துள்ளது.