சிங்கப்பூரில் புதிதாக 451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில், ஒருவர் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்.
இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,794 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இதுவரை 9,835 பேர் சிகிச்சை பெற்று கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும், வீடுகளில் அல்லது அரசுக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 15,000 பேர் இன்று முதல் வீடுகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கானதனிமைப்படுத்தல் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அந்நாட்டு அரசு அவர்களை விடுத்துள்ளது.