தென் கொரியாவில் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதையடுத்து, அந்த நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கல்வி அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.