வங்கதேசத்தில் வீசிய ‘உம்பன்’ புயலுக்கு 10 போ் பலியாகினா். இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
புதன்கிழமை கரையைக் கடந்த ‘உம்பன்’ புயல், கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தைத் தாக்கிய மிக உக்கரமான புயலாகும். இந்தப் புயல் காரணமாக கரையோர கிராமங்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தன; பல இடங்களில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த புயல் பாதிப்பு காரணமாக 10 போ் உயிரிழந்தனா்.
வங்கதேசத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வீசிய ‘சிதிா்’ புயலுக்கு 3,500 போ் பலியாகினா். அதற்குப் பிறகு தற்போதுதான் மிக மோசமான புயலை நாடு சந்தித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.