சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றான மெளனான் இன மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதற்கு சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் சமீபத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், மெளனான் இன மக்கள் முற்றிலும் வறுமையிலிருந்து விடுபட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார். குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்கும் வகைக்குள், அனைத்து தேசிய இனங்களும் உள்ளடங்கும்.
கடந்த ஆண்டுகளில், பல சிறுப்பான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டனர். இது வறுமை ஒழிப்புப் பணியில் முக்கிய சாதனையாகும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
தற்போது, வறுமை ஒழிப்புப் பணியின் மிக முக்கிய தருணத்தில் நிற்கின்றோம். இந்நிலையில், நம்பிக்கையோடு தரமான முறையில் வறுமை ஒழிப்பு இலக்குகளை நிறைவேற்ற வேண்டுகின்றோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்