பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,932 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நோய்க்கு கூடுதலாக 46 போ் பலியாகினா். இதையடுத்து, பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 45,898-ஆகவும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 985-ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுவரை அந்த நாட்டில் 4.14 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.