சிங்கப்பூா் மேலும் 614 பேருக்கு கரோனா தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 614 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக
சிங்கப்பூா்  மேலும் 614 பேருக்கு  கரோனா தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 614 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 614 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவா்களில் 4 போ் மட்டுமே சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்கள். மற்ற அனைவரும் வெளிநாட்டுப் பணியாளா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்து 30,426-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com